திருத்தப்பட்ட பேருந்து கட்டண அட்டவணைகள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
திருத்தப்பட்ட பேருந்து கட்டண அட்டவணைகள் பொதுமக்கள் பார்வைக்கு கட்டாயமாக காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கட்டணங்களை காட்சிப்படுத்தத் தவறும் நடத்துநர்களை கண்டறிவதற்கான சோதனைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் காமினி ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த விதிமுறையை மீறி செயல்படும் பேருந்துகளின் உரிமங்கள் இரத்து செய்யப்படுவதோடு, கடுமையான அபராதங்களும் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.