உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

பாடசாலை மாணவன் மீது தாக்குதல்; மூவர் கைது.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
42 பார்வைகள்

ஹட்டன் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் வகுப்பறைக்குள் மாணவர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் என மூன்று பேர் ஹட்டன் தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு மாணவர் குழுக்களுக்கிடையே கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதலில் பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும் தொடர்புபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் இந்த விவகாரம் பாடசாலை மட்டத்தில் முடித்து வைக்கப்பட்டிருந்தது. எனினும், தாக்குதல் நடத்தப்படும் காட்சிகள் அண்மையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.

இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் நேற்று சனிக்கிழமை (28) ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து, தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இரு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

தாக்குதலுக்குள்ளான மாணவர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூவரும் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதன்போது, நீதவானின் உத்தரவுக்கமைய சந்தேகநபர்களான மாணவர்களை அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஹட்டன் தலைமையக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட செயலக திறன்விருத்தி மண்டபத்தில் நடைபெற்ற செயலமர்வு.!

வெளிநாட்டு வேலைவாய்ப்புடன் தொடர்புடைய குடும்பங்களின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், ஒருங்கிணைந்த அணுகுமுறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான செயலமர்வு மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில்…

60 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு – கிழக்கில் அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவு.!

இராணுவம் உள்ளிட்ட அரச நிறுவனங்களினால் அபகரிக்கப்பட்ட அல்லது மக்கள் பயன்பாட்டிலிருந்து தடுக்கப்பட்டுள்ள காணிகளுக்கான உரிமைப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, வடக்கு –…

67 0 0
இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்.!

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பல வைத்தியர்கள் தாங்கள் பிறந்த மண்ணில் பணி செய்ய தயக்கம் காட்டி வருகின்ற நிலையில், அவர்கள் தமது மண்ணில் கடமையாற்ற முன்நிற்க வேண்டும்.…

45 0 0
இலங்கை செய்திகள்

ருமேஷ் தரங்கவிற்கு மற்றுமொரு வரலாற்று வெற்றி.!

சுவிட்சர்லாந்தில் இன்று காலை (28) நடைபெற்ற புகழ்பெற்ற ‘சூரிச்’ டயமண்ட் லீக் தடகளப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில், இலங்கையின் முன்னணி வீரரான ருமேஷ் தரங்க…

69 0 0