இலங்கைக்கு எரிபொருளை வழங்க ரஷ்யா இணக்கம் -மயூர நெத்திகுமாரகே தெரிவிப்பு.!
இலங்கைக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரின் தலைமையிலான தூதுக்குழுவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இலங்கையின் தற்போதைய தேவையை கருத்தில் கொண்டு, தட்டுப்பாடின்றி பெற்றோல் மற்றும் டீசல் வழங்க ரஷ்யா உறுதியளித்துள்ளது.
இடைத்தரகர்கள் இன்றி அரச மட்டத்தில் நேரடி ஒப்பந்தம் செய்து எரிபொருள் பெற்றுக்கொள்வது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.மேலும், எரிபொருள் வழங்குதலுடன் இணைந்து இலங்கையின் எரிசக்தி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் ரஷ்யா ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.