உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

முன்னாள் எம்.பி சஜின் வாஸ் குணவர்தனவை 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
30 பார்வைகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, சட்டவிரோத முறையில் சுமார் 243.8 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சேகரித்த குற்றச்சாட்டில், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் மார்ச் 31 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர் வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக இருந்த காலத்தில், தனது உத்தியோகபூர்வ வருமானத்திற்கு மேலாக 243.8 மில்லியன் ரூபா ஈட்டியதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.

குறிப்பாக, அவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சேர்ந்து மொத்தம் 27 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும், இதற்காக மனைவியின் வங்கி கணக்கின் ஊடாக 34 மில்லியன் ரூபாவுக்கு மேல் பணம் பரிமாற்றப்பட்டுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

நீதிமன்றம் இந்த வழக்கில் விசாரணைகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என்பதால், சந்தேகநபரின் பிணை கோரிக்கையை நிராகரித்து, அவர் மார்ச் 31 வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

50 0 0