உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

எரிபொருள் விலையேற்றத்தின் பின்னணியில் பாரிய ஊழல்;முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா பகிரங்கக் குற்றச்சாட்டு.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
56 பார்வைகள்

மார்ச் மாதத்திற்குள் அரசாங்கம் மூன்று முறை எரிபொருள் விலையை உயர்த்தியமை, பொதுமக்கள், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது என முன்னாள் ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில், உலகளவில் நிலவும் போர்நிலையை விட, தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத் திறமையின்மையே இந்நெருக்கடிக்கான முக்கிய காரணமாக இருப்பதாகக் கூறினார்.


கடந்த காலங்களில் கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலவியபோதிலும், சர்வதேசநிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையிலும், அரசாங்கம் எரிபொருள் விலைகளை கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். அப்போது தனியார் நிறுவனங்கள் தன்னிச்சையாக விலைகளை உயர்த்துவதற்கு இடமளிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


ஆனால் தற்போது அரசாங்கம் திட்டமிட்டு மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருவதாகவும், தனியார் நிறுவனங்களின் விலை நிர்ணயத்தில் தலையீடு செய்யாமல் பின்வாங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.சிங்கப்பூர் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன என்ற அமைச்சரின் கூற்று முற்றிலும் தவறானது எனவும், தரையிறக்கும் செலவுகள் உள்ளிட்டவை தவறாகக் காட்டப்பட்டு மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.


உலக சந்தை நிலவரத்தின்அடிப்படையில் இதைவிடக் குறைந்த விலையில் எரிபொருள் வழங்க முடியும் என்றும், கடந்த ஆறு மாதங்களாக நிலவி வரும் உலகளாவிய நெருக்கடியை சமாளிக்க அரசாங்கத்திடம் போதுமான திட்டமிடல் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
மேலும், டொலர் மதிப்பு குறைவாகவே உயரும் என கூறப்பட்ட நிலையிலும், எரிபொருள் விலைகள் அதிகளவில் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


நிலக்கரி கொள்வனவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளே தற்போதைய டீசல் நெருக்கடிக்குக் காரணம் எனவும், அதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாமல், அதன் சுமை பொதுமக்கள் மீது ஏற்றப்படுகின்றது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

50 0 0