உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
28 வெள்ளி

இந்திய பாரம்பரிய நெல் இனங்கள் யாழில் அறுவடை.!

இலங்கை செய்திகள் 5 மாதங்கள் முன்
29 பார்வைகள்

இந்தியாவில் பழமையான காலங்களில் மன்னர்களால் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய நெல் இனங்கள் யாழ்ப்பாணத்தில் முதன்முறையாகப் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளன.


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் கறுப்பு கவணி, மாப்பிள்ளை சம்பா மற்றும் கருஇழை போன்ற நெல் இனங்கள் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பயிரிடப்பட்டன. அவை நேற்று அறுவடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்று வயலில் பொங்கல் விழா நடைபெற்றது.


அதனைத் தொடர்ந்து பாரம்பரிய முறையில் நிலம் மீண்டும் உழப்பட்டு சிறுதானிய வகையான பயறு விதைக்கப்பட்டது. பின்னர் கலந்து கொண்டவர்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது.மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ளஇந்திய துணைத் தூதரகத்தின் மூலம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கப்பட்டன.


கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டோர் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர்.மேற்குறித்த நெல் இனங்கள் இலங்கையில் முதன்முறையாகப் பயிரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தத்தால் ஊழல் வழக்குகளை விரைவுபடுத்த முடியாது.!

முன்வைக்கப்பட்டுள்ள 22ஆவது அரசமைப்பு திருத்த யோசனையின் மூலம் ஊழல் வழக்குகளை ஒருபோதும் விரைவுபடுத்த முடியாது என்றும், அரசு கூறிவரும் கருத்துக்கள் முற்றிலும் பொய் என்பது இதன் மூலம்…

29 0 0
இலங்கை செய்திகள்

அடுத்த ஒன்றரை மாதங்களில் சிறைச்சாலை நெரிசல் குறையும்.!

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் முற்றாகக் குறைக்கப்படும்…

61 0 0
இலங்கை செய்திகள்

நீதித்துறை, பொருளாதாரம் தொடர்பில் பேச ராஜபக்ஷக்களுக்குத் தார்மீக உரிமை இல்லை.!

அரசு சிறந்த பல திட்டங்களை முன்னெடுக்கும் போது ஊழல்வாதிகள் அனைவரும் அதற்கு எதிராக ஒன்றிணைந்துள்ளனர் என்று தெரிவித்த தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, நீதித்துறை சுதந்திரம்…

51 0 0
இலங்கை செய்திகள்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் செம்மணி விவகாரம் தொடர்பில் அழுத்தம் பிரயோகிக்க வேண்டும்.!

செம்மணி மனிதப் புதைகுழி குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படுவதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டு இலங்கை அரசுடன் பேச்சுகளில் ஈடுபடுவதுடன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில்…

51 0 0