உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் !

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
33 பார்வைகள்

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களால் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று முல்லைதீவு வட்டுவாகல் பகுதியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னேடுத்தனர்.

வட்டுவாகல் கோட்டாபய கடற்படை தளத்திற்கு முன்பாக ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது வட்டுவாகல் பாலம் ஊடாக வட்டுவாகல் சந்திக்கு அருகில் உள்ள பகுதியை வரை சென்று நிறைவுற்றது.

இந்தப் பகுதியானது இறுதி யுத்த காலப்பகுதியில் தமது உறவுகளை ராணுவத்திடம் கையளித்த இடம் என தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை ஆரம்பித்து ஒன்பது வருடங்கள் நிறைவுற்றதையும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்தப் போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது பல்வேறுபட்ட கோச அட்டைகளை தாங்கியவாறும் கோஷங்களை எழுப்பியவாறு போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த போராட்டத்தில் 250க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கலந்து கொண்டதுடன் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராஜா ரவிகரன் மற்றும் மணிவண்ணன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்..

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

81 0 0