உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வீரவனிதையர் விருது விழாவில் 20 சாதனைப் பெண்களுக்கு மகுடம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
53 பார்வைகள்

புதிய அலை கலை வட்ட மகளிர் அணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘வீரவனிதையர் விருது விழா’ மற்றும் சர்வதேச மகளிர் தின விசேட நிகழ்வு நேற்று சனிக்கிழமை கொழும்பில் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல்ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

பிரபல தொழிலதிபர் பி.எஸ். செல்வரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், தமிழகத்திலிருந்து வருகை தந்த கவிஞர் தங்கம் மூர்த்தி, ‘தினகரன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், டாக்டர் கனகலட்சுமி மற்றும் காயத்ரி விக்கிரமசிங்க, எம்.யோகராஜா, ஆர்.வைத்தியமாநிதி ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.

இதன்போது, சமூகத்தின் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 20 பெண்களுக்கு ‘வீரவனிதையர் விருது’ வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

புதிய அலை கலை வட்டத்தின் நிறுவுநர் ராதாமேத்ராவின் மேற்பார்வையில் நடைபெற்ற இந்த விழாவின் ஓர் அங்கமாக இளங்கலைஞர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின.

பெண்மையைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்வில் பெருமளவிலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

69 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0