உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சட்டத்தின் ஆட்சி எங்கே? – ரணில் மற்றும் குமார ஜயகொடி விவகாரங்களை முன்வைத்து தயாசிறி சாடல்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் தற்போதைய மின்சக்தி அமைச்சர் குமார ஜயகொடி ஆகியோருக்கு எதிராகச் சட்டம் இருவேறு விதமாகச் செயற்படுத்தப்படுகின்றது என்று எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னரே அவருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பிணை வழங்குவது அல்லது வழங்காதது தொடர்பான விடயங்கள் நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, அதன் பின்னரே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

அதேநேரம், அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும். அவர் விடயத்தில் சட்டம் கையாளப்படும் விதம் குறித்துக் கேள்வி எழும்புகின்றது.

பிணை வழங்குவது தொடர்பாக அமைச்சர் குமார ஜயகொடியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமல், நேரடியாகக் குற்றப்பத்திரிகை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒரே விடயத்தில் இருவேறு முறைகளில் சட்டம் செயற்படுத்தப்படுவது ‘சட்டத்தின் ஆட்சி’தானா?

எனவே, குற்றப்பத்திரிகை கையளிக்கப்படுவதற்கு முன்னர், அமைச்சர் குமார ஜயகொடியும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

67 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0