உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

சுகாதார விதி மீறல்: செங்கலடி உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
50 பார்வைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி நகரில் இயங்கிவந்த உணவகம் ஒன்று நீதிமன்ற உத்தரவின்படி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், சுகாதார விதிமுறைகளை மீறியமைக்காக ரூ. 70,000 அபராதம் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ளது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.


ராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரியின் வழிகாட்டலில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தவேந்திரராஜா, அமுதமாலன், மனோகரன், ஹிசாந்தராஜா ஆகியோர் இணைந்து மேற்கொண்ட பரிசோதனையின் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


பொது சுகாதாரத்திற்கு இடையூறாக கழிவு நீரை திறந்த வெளியில் வெளியேற்றியதும், வண்டுகளுடன் கூடிய உணவு மூலப்பொருட்களை உணவு தயாரிப்பிற்காக களஞ்சியப்படுத்தியதும்கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, உணவக உரிமையாளருக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


வழக்கை பரிசீலித்த நீதிமன்றம், திருத்த நடவடிக்கைகள் நிறைவேறும் வரை உணவகத்தை தற்காலிகமாக மூடவும், கைப்பற்றப்பட்ட கோதுமை மா, வடைப்பருப்பு, மைசூர் பருப்பு, கடலை உள்ளிட்ட பொருட்களை அழிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0