உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரானுக்கு எதிரான அழுத்தங்களை கண்டித்து கொழும்பில் கவனயீர்ப்புப் போராட்டம்.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக கொழும்பில் இன்று கவனவீர்ப்புப் போராட்டம் நடைபெற்றது.கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தெவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

“பாலஸ்தீனத்தின் நண்பர்கள்” அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட வாசக அட்டைகளை ஏந்தியிருந்தனர். “ஈரான் மீது கை வைக்காதே”, “அமெரிக்க–இஸ்ரேல் பயங்கரவாதத்தை நிறுத்து”, “ஈரான் மீதான போரை தவிர்” உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.


மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையில் ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என்றும், வெளிநாட்டு தலையீடுகள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

56 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0