அவசரகாலச் சட்டம் தேவையற்ற முறையில் பயன்படுத்தப்படவில்லை – பாதுகாப்பு பிரதி அமைச்சர்.!
அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை தேவையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.பாராளுமன்றம் இன்று (06) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.
ஊழல் மிகுந்த நிலையிலிருந்த நாட்டையே தற்போதைய அரசாங்கம் பொறுப்பேற்றதாகவும், இருப்பினும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.அத்துடன் நாட்டில் சட்டத்தின் ஆட்சி உறுதிப்படுத்தப்படுவது அவசியமானது என்றும் அவர் வலியுறுத்தினார்.
தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டதும், பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையிலும் நாட்டை பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் டிட்வா சூறாவளியின் தாக்கம் மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் யுத்த நிலைமையால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை கட்டுப்படுத்தி மக்களை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்லும் நோக்கிலேயே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.