உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

போதைப்பொருள் ஒழிப்பு வாரம்: பருத்தித்துறையில் பொலிஸார் விழிப்புணர்வு நடவடிக்கை.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
40 பார்வைகள்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் போதைப்பொருள் எதிர்ப்பு செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “முழு நாடும் ஒன்றாக” எனும் தேசிய செயல் திட்டத்தின் கீழ், போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு பருத்தித்துறை பொலிஸாரால் பொதுமக்களுக்கிடையில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.


இந்த நிகழ்வின் போது “விற்கும் – பயன்படுத்தும் அனைவருக்கும் அறிவிப்பு: விலகிச் செல்லுங்கள்” என்ற வாசகத்தை மையமாகக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. மேலும் முச்சக்கர வண்டிகளில் விழிப்புணர்வு ஒட்டுப்பலகைகளும் ஒட்டப்பட்டன.போதைப்பொருளின் ஆபத்துகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன், வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஒட்டுப்பலகைகளும் ஒட்டப்பட்டன. அதேபோல் அரச அலுவலகங்கள் மற்றும் பொதுஇடங்களிலும் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.


போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான இளைஞர் சமூகத்தை உருவாக்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த வாரம் முழுவதும் நடைபெறும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பங்கேற்பதன் மூலம் பிரதேசத்தை போதைப்பொருள் அற்ற சூழலாக மாற்ற முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


“போதை ஒழிப்பு – நமது பொறுப்பு; இளைஞர்களைப் பாதுகாப்போம், சமூகத்தைப் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளில் இந்த போதைப்பொருள் தடுப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இந்த நிகழ்வில் பருத்தித்துறைபொலிஸ் நிலைய பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0