உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

ஈரானிய கப்பலில் வந்த 208 பேரும் பத்திரமாக மீட்பு.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
41 பார்வைகள்

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டிருந்த ‘ஐரிஸ் புசேஹெரின்’ என்ற ஈரானிய கப்பலில் பயணித்த 208 பணியாளர்களும் பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உரிய இராஜதந்திர மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி அவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கொழும்புத் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டுள்ள ஈரானியப் பணியாளர்கள் அனைவரும், மேலதிக நடவடிக்கைகளுக்காக வெலிசர கடற்படைத் தளத்துக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படும் என்றும் கடற்படை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், குறித்த ஈரானியக் கப்பலை திருகோணமலை துறைமுகத்துக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்தியப் பெருங்கடலில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலினால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஈரானியப் போர்க்கப்பல் தொடர்பான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. இந்தத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இந்தியாவும் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0