உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்கு அரசாங்கம் பணியக் கூடாது! – விமல் எச்சரிக்கை

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
48 பார்வைகள்

இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானிய கடற்படைக் கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என அமெரிக்கத் தூதரகம் அழுத்தம் விடுத்து வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச குற்றம் சாட்டியுள்ளார்.


அவர், இந்த விவகாரத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளிநாட்டு அழுத்தங்களுக்கு இணங்குகிறாரா என கேள்வி எழுப்பியுள்ளார். துறைமுக அதிகாரிகளுக்கும் அரசாங்கத்திற்கும் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


குறித்த கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதித்தால் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் விமல் வீரவங்ச கூறியுள்ளார். எனினும், இவ்விடயத்தில் அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வ விளக்கம் அளிக்கவில்லை.
அவர் மேலும் கூறுகையில், இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இராணுவக் கண்காட்சிக்குச் சென்ற மூன்று ஈரானியக் கப்பல்களில் ஒன்று தற்போது பாணந்துறை கடற்பரப்பிற்கு அப்பால் ஆழ்கடலில் நிலைகொண்டுள்ளதாகவும், அந்தக் கப்பல் கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


இக் கப்பல் இராணுவ நடவடிக்கைக்காக வரவில்லை என்றும், தொழில்நுட்பத் திருத்தங்கள் அல்லது அத்தியாவசிய தேவைகளுக்காக அனுமதி கோரப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.இலங்கையின் அணிசேரா வெளியுறவு கொள்கையை உறுதியாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய விமல் வீரவங்ச, வெளிநாட்டு அழுத்தங்களுக்கு அடிபணியாமல் அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0