ஈரான் ஆன்மீகத் தலைவர் கமேனியின் மறைவுக்கு ரிஷாத் பதியுதீன் இரங்கல்.!
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கூட்டுப் படைகளின் தாக்குதலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் மறைவுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பிலுள்ள ஈரான் தூதரகத்துக்கு விஜயம் செய்த ரிஷாத் பதியுதீன், அங்குள்ள ஈரானிய தூதுவர் அலிடெர்ஷா டெல்கொஷ்வை நேரில் சந்தித்து தனது அனுதாபங்களை தெரிவித்தார்.அத்துடன், தூதரகத்தில் வைக்கப்பட்டிருந்த இரங்கல் பதிவேட்டிலும் தனது இரங்கல் செய்தியை பதிவு செய்தார்.
இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அஷ்ரப் தாஹீர் மற்றும் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்தாஹீர் மரிக்கார் ஆகியோரும் கலந்து கொண்டு தமது இரங்கல்களை பதிவு செய்தனர்.
ஈரான் மீதான தாக்குதல் மற்றும் அதன் ஆன்மீகத் தலைவரின் மறைவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் இந்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.