உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு அரசாங்கம் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன? தயாசிறி கேள்வி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
34 பார்வைகள்

ஈரானிய கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கையை எடுக்கப்போகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது அவர் இந்த கேள்வியை முன்வைத்தார்.


இந்திய கடற்படைப் பயிற்சிக்காக ஈரானிய கப்பல் இலங்கைக் கடற்பரப்பிற்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இவ்வாறான சூழலில் இலங்கை ஒரு நாடாக பெரிய நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் 1971 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்திற்கமைய இந்தியப் பெருங்கடலை அமைதி வலயமாக ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் தற்போதைய சூழலில் இலங்கை பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும்குறிப்பிட்டார்.


அத்துடன் இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்கள் ஈரான் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து பெரும் வேதனையும் ஏமாற்றமும் அடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து அரசாங்கம் இதுவரை எந்த கண்டனமும் வெளியிடவில்லை என்றும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் எத்தகைய நடவடிக்கை எடுக்கப்போகிறது என்றும்தயாசிறி ஜெயசேகர கேள்வி எழுப்பினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0