‘சரோஜா’ திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு.!
‘சரோஜா’ திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.அம்பாறை பொலிஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதிகளாக அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி, அம்பாறை உதவி பொலிஸ் மா அதிபர் 1 சம்பத் விக்ரமரத்ன, பொத்துவில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அம்பாறை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உபுல் குணவர்தன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வு அதிதிகள் வரவேற்புடன் தொடங்கி மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து சமய அனுஷ்டானங்களுடன் நிகழ்ச்சி இடம்பெற்றது.இதன்போது நிகழ்வின் நோக்கம் குறித்து அம்பாறை பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி உரையாற்றினார். தொடர்ந்து மாணவிகளின் நடன நிகழ்வு அரங்கேறியது.
மேலும் அம்பாறை பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல, சமூக சேவைகளில் பொலிஸாரின் பங்களிப்பு குறித்து விரிவாக உரையாற்றினார்.இந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், பொலிஸ் இசைக்குழுவின் இசை நிகழ்ச்சிகளும் சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.இவ்வாறு பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நிகழ்வு சிறப்பாக நிறைவுற்றது.