ஜப்பானிடமிருந்து 08 தாழ்தளம் கொண்ட பழைய பேருந்துகள் நன்கொடை.!
இலங்கையின் பொதுப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், ஜப்பான் அரசாங்கம் 08 தாழ்தள (குறைந்த தரை) பயன்படுத்தப்பட்ட பேருந்துகளை நன்கொடையாக வழங்க முன்வந்துள்ளது.
2025 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் பலனாக இந்த உதவி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் பொதுப் போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும், பயணிகளின் வசதியை அதிகரிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.