அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர தொலைபேசியில் பேச்சு: தாக்குதல்களுக்கு கடும் கண்டனம்!
ஐக்கிய அரபு இராச்சிய ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று தொலைபேசி மூலம் கலந்துரையாடி, அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் தனது வருத்தத்தைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, அனைத்து வகையான வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் இலங்கை வலுவாகக் கண்டிப்பதாகவும், இலங்கையின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கை ஐக்கிய அரபு இராச்சியத்துடன் உறுதியாக நிற்பதுடன், தேவையான எந்தவிதமான உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மத்திய கிழக்கு பிராந்தியத்தில்நிலவும் பதற்றமான சூழ்நிலையின் பின்னணியில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது.