உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இலங்கை பாதுகாப்பு வலயத்தில் தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது? – நாமல் கேள்வி.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
36 பார்வைகள்

இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய கடல் வலயத்துக்குள் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் எவ்வாறு இடம்பெற்றது என நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் இந்த விவகாரத்தை முன்வைத்தார்.


அவர் மேலும் கூறுகையில், இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் வலயத்துக்குள் அல்லது அதற்கு அண்மையிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்றார்.
சம்பவ இடத்துக்கு சென்ற இலங்கைக் கடற்படையினர் காயமடைந்தவர்களை மீட்டு காலி போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சுமார் 101 பேர் காணாமல் போயுள்ளதாக அல்லது காணாமல் போயிருக்கலாம் என நம்பப்படுவதாக தெரிவித்தார்.அத்துடன், குறித்த கப்பல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.

அது விசாகப்பட்டினம் நகரில் நடைபெற்ற சர்வதேச கடற்படைப் பயிற்சியில் கலந்துகொண்டு அரபிக்கடலை நோக்கித் திரும்பிக்கொண்டிருந்த கப்பலா, அல்லது இலங்கையை நோக்கி பயணித்த கப்பலா எனத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
இலங்கைக் கடற்படை பாதுகாப்பு வழங்க வேண்டிய வலயத்துக்குள் இத்தகைய தாக்குதல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது என்பதை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

64 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

68 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0