உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கைது.!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
26 பார்வைகள்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 12 போர் ரகத் தோட்டாக்களைப் பயன்படுத்தக்கூடிய துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த குற்றச்சாட்டில், ஓய்வுபெற்ற ஊனமுற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் அம்பாந்தோட்டை, பல்லேமலல பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் முல்லைத்தீவு 9 ஆவது கெமுனு ஹேவா படையணியில் சிப்பாயாகப் பணியாற்றியவர் எனவும், அவர் கடந்த 2019ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெற்றுள்ளவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின்போது, இந்தச் சந்தேகநபர் இதற்கு முன்னரும் கஞ்சா மற்றும் ஹெரோயின் வைத்திருந்தமை மற்றும் ஊரடங்குச் சட்டத்தை மீறியமை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர் என்பது தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

60 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0