உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மாசிமகப் பஞ்சரத பவனி!

இலங்கை செய்திகள் 6 மாதங்கள் முன்
35 பார்வைகள்

வரலாற்றுப் புகழ் மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் மாசி மகோற்சவத்தின் உச்ச நிகழ்வான பஞ்சரத பவனி இன்று (02) திங்கட்கிழமை பக்திப் பெருக்கோடு சிறப்பாக நடைபெற்றது.அதிகாலை 1.00 மணியளவில் உதயகால பூஜையுடன் திருவிழா நிகழ்வுகள் ஆரம்பமானது. மூலஸ்தான அம்பாளுக்கு 108 சங்காபிஷேகம் மற்றும் 108 கலசாபிஷேகம் ஆகியவை ஆகம முறைகளின்படி மிகுந்த பக்தியுடன் இடம்பெற்றன.


இதனைத் தொடர்ந்து காலை 8.00 மணியளவில் இரதோற்சவ வசந்த மண்டப பூஜைகள் நடைபெற்றன. இதில் ஸ்ரீ பஞ்சமுக விநாயகர், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சண்முகர், ஸ்ரீ முத்து மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரர், ஸ்ரீ முத்துமாரியம்பாள் மற்றும் ஸ்ரீ சண்டேஸ்வரி ஆகிய ஐந்து மூர்த்திகளும் சிறப்பு அலங்காரங்களுடன் எழுந்தருளினர்.தேவர்களால் சாத்தப்பட்ட பிரத்யேக ரோஜா மாலைகளை அணிந்து, இராஜகோபுர வீதி வழியாக ஐந்து தேர்களில் ஆரோகணித்த மூர்த்திகள் பிரதான வீதி வழியாக வீதி உலா வந்தனர்.


பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து இழுக்கும் பஞ்சரதங்கள், பக்தி முழக்கங்களின் நடுவில் இன்று இரவு முழுவதும் நகரைச் சுற்றி வீதி உலா வருகின்றன. மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பகல் 1.00 மணியளவில் இராஜவீதியூடாக மீண்டும் தேவஸ்தானத்தை வந்தடையவுள்ளன.


அம்மன் திருக்கோயிலுக்கு வந்தடைந்த பின், வரலாற்றுச் சிறப்புமிக்க பச்சைசாத்துதல் வைபவம் விமரிசையாக நடைபெறவுள்ளது. இந்த ஆன்மீகப் பெருவிழாவைக் காண நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் பெருமளவில் மாத்தளை நகரில் திரண்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

55 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

62 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

49 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

69 0 0