மணற்காட்டில் இடம்பெற்ற சிரமதானம்.!
வட பிராந்திய சத்தியசாயி நிறுவனத்தின் ஏற்பாட்டில் மணற்காட்டில் சிரமதானம் இடம்பெற்றது.
இதில் மருதங்கேணி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மணற்காட்டு (J 418) கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர், வட பிராந்திய சத்தியசாயி நிறுவனத்தின் தொண்டர்கள், பருத்தித்துறை பிரதேச சபை ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், பருத்தித்துறை பிரதேச சபை 8ம் வட்டார உறுப்பினர் அ.அகஸ்ரின், பருத்தித்துறை முதலுதவி சங்கம் (Sri Lanka Red Cross Society), மணற்காட்டு அபிவிருத்தி சங்கங்கள், பொதுஅமைப்புக்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


