உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

ஐஸ் போதைப்பொருளுடன் கைதான நபர்; விசாரணையில் வெளியான தகவல்.!

இலங்கை செய்திகள் 7 மாதங்கள் முன்
27 பார்வைகள்

ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டதையடுத்து அவர், துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த 19ஆம் திகதி ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தொடர்பில், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்தது.

குறித்த விசாரணைகளின்போது, சந்தேகநபர் 08.11.2024 அன்று மருதானை – நெலும் குளுன் பகுதியில் ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்தில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.

கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தியவன்னா ஓயாவில் விழுந்த பெண் கடற்படையினரால் மீட்பு.!

பத்தரமுல்ல, ஜப்பான் நற்புறவு வீதியின் சதுன் உயன பகுதியில் இன்று (24) நண்பகல் தியவன்னா ஓயா ஆற்றில் விழுந்த 59 வயதுடைய பெண்ணொருவர் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக…

46 0 0
இலங்கை செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின மாநாட்டிற்கு அனைவரும் கை கொடுக்க வேண்டும்.!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 30 ஆம் திகதி இடம்பெற உள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி முன்னெடுக்கப்படவுள்ள மாநாட்டிற்கு தமிழ் தேசியத்தை விரும்பும் அனைவரும் கை கொடுக்க வேண்டும்…

52 0 0
இலங்கை செய்திகள்

அரசு மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க முன்வர வேண்டும்.!

பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தற்போதைய…

57 0 0
இலங்கை செய்திகள்

வீடொன்றுக்குள் புகுந்து தங்க நகைகள் கொள்ளை; 4 பேர் கைது.!

வவுனியாவில் வீடொன்றுக்குள் நுழைந்து 16.750 பவுண் நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 4 பேரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 20ஆம் திகதி வவுனியா, தேக்கவத்தை…

62 0 0