ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு.!
இஸ்லாமிய மார்க்கத்திற்கு இழிவு ஏற்படுத்தியதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின்கீழ், பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது பிரதிவாதியான கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.