தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு.!
தியாக தீபம் திலீபன் அவர்களது 39ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வவுனியா வடக்கு பிரதேசக் கிளையின் ஏற்பாட்டில் பிரதேசக் கிளையின் செயலாளர் த.தவேந்திரராசா (அமலன்) அவர்களின் தலைமையில் நேற்று (15.09.2026) புளியங்குளத்தில் அமைந்துள்ள கட்சியின் பிரதேசக் கிளை அலுவலகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம், கட்சியின் வவுனியா மாவட்ட உபதலைவர் பாலச்சந்திரன் சிந்துஜன், பிரதேச சபை உறுப்பினர்களான தர்மலிங்கம் தனுசன், செல்வராசா சுசீலன், பொதுமக்களென பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது தியாக தீபம் திலீபன் அவர்களது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஈகைச்சுடரும் ஏற்றப்பட்டது.




