உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
16 புதன்

ஜப்பானில் 100 வயதைக் கடந்த முதியவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது

உலக செய்திகள் 5 மணி நேரம் முன்
56 பார்வைகள்

ஜப்பானில் 100 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்களின் எண்ணிக்கை முதன்முறையாக 1 லட்சத்தைக் கடந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானில் தற்போது 107,677 முதியவர்கள் 100 வயதைக் கடந்து வாழ்ந்து வருகின்றனர். இது உலகிலேயே மிக அதிக எண்ணிக்கையாகும். இதில் 88% பேர் பெண்கள் ஆவர்.

கியோட்டோ (Kyoto) நகரத்தைச் சேர்ந்த 114 வயதான கிஷிமோட்டோ ஃபுயோ (Kishimoto Fuyo) மிகவும் வயதான பெண்ணாகவும், குமாமோட்டோவைச் (Kumamoto) சேர்ந்த 112 வயதான காடோ ஹிகாரூ (Kato hikaru) மிகவும் வயதான ஆணாகவும் கருதப்படுகின்றனர்.

இந்தநிலையில், மருத்துவத் துறை மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியே இதற்குக் காரணம் எனக் குறிப்பிட்ட சுகாதார அமைச்சர் கெனிசிரோ உஎனோ (Kenichiro Ueno), சவால்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையான சமூகப் பாதுகாப்பு அமைப்பைப் பராமரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

மீன், காய்கறிகள் மற்றும் அரிசி ஆகியவை அடங்கிய குறைந்த நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பாரம்பரிய உணவு முறை.
முதியவர்கள் தொடர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வது, பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவது, சைக்கிள் ஓட்டுவது மற்றும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வது என்பன இதில் முக்கியமானவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாட்டின் மக்கள்தொகை நிலையாக இருக்க ஒரு பெண்ணுக்கு சராசரியாக 2.1 குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால், கடந்த ஆண்டில் ஜப்பானின் கருவுறுதல் விகிதம் 1.14 ஆகக் குறைந்துள்ளது.

65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் தற்போது நாட்டின் 30% மக்கள்தொகையாக உள்ளனர். இது 2070 ஆண்டுக்குள் 40%ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

2008 இல் 12.8 கோடியாக இருந்த உச்சபட்ச மக்கள் தொகை, 2070 க்குள் 30% குறைந்து 8.7 கோடியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இந்த மக்கள்தொகை வீழ்ச்சியை ஒரு “அமைதியான அவசரநிலை” (quiet emergency) என பிரதமர் சனாயே டாகிச்சி (Sanae Takichi) வர்ணித்துள்ளார்.

1963-ல் முதன்முதலில் இந்த ஆய்வு தொடங்கியபோது 100 வயதைக் கடந்தவர்கள் 153 பேர் மட்டுமே இருந்தனர். இந்த எண்ணிக்கை 1981-ல் 1,000 ஆகவும்இ 1998-ல் 10,000 ஆகவும் உயர்ந்தது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

மியன்மார் இராணுவத்திற்குத் தரவுகளை வழங்கிய குற்றச்சாட்டு : நோர்வே பொலிஸார் விசாரணை!

மியன்மாரில் 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் பின்னர், அந்நாட்டு இராணுவத்திற்கு வாடிக்கையாளர்களின் தொலைத்தொடர்புத் தரவுகளை வழங்கி மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைபுரிந்ததாகக் கூறி, பிரபல…

30 0 0
உலக செய்திகள்

C5+ உச்சிமாநாடு சியோலில் ஆரம்பம்!

மத்திய ஆசிய நாடுகளுடனான பொருளாதார மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், தென்கொரியா முதன்முறையாக C5+ எனப்படும் ஐந்து மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களை உள்ளடக்கிய வரலாற்றுச்…

36 0 0
உலக செய்திகள்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்காவுக்கு $38 பில்லியன் செலவு!

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா நடத்திவரும் ஆறு மாத காலப் போருக்கு இதுவரை 38 பில்லியன் டொலர் செலவாகியுள்ளது என்றும், இத்தொகை மாதத்திற்கு 3 பில்லியன் டொலர் வீதம்…

30 0 0
உலக செய்திகள்

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா குற்றச்சாட்டு!

யேமனின் ஹூதி அமைப்பினருக்கு ஆயுதங்கள், நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை வழங்கி வழிநடத்துவதன் மூலம், ஈரான் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்மானங்களை நேரடியாக மீறி வருவதாக…

37 0 0