உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி சாதனை.!

இலங்கை செய்திகள் 45 நிமிடங்கள் முன்
39 பார்வைகள்

அகில இலங்கை தமிழ்மொழித் தினப் போட்டியில் நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட சென்கிளையார் தமிழ் வித்தியாலய மாணவி ப.ஹன்சிகா தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற தமிழ்மொழித் தினப் போட்டிகள் நேற்று பத்தரமுல்லை இசுறுபாயவில் இடம்பெற்றன.

இதன்போது, நுவரெலியா கல்வி வலயத்தைச் சேர்ந்த சென்கிளையார் தமிழ் வித்தியாலயத்தில் இருந்து பாவோதல் பிரிவு இரண்டில் போட்டியிட்ட மாணவி ப.ஹன்சிகா, தனது திறமையை வெளிப்படுத்தி தேசிய மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

மாகாண மட்டப் போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்த மாணவி ஹன்சிகா, தேசிய மட்டத்திலும் சிறப்பான திறமையை வெளிப்படுத்தி இந்த வெற்றியைப் பதிவு செய்துள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் சென்கிளையார் தமிழ் வித்தியாலயத்திற்கும், நுவரெலியா கல்வி வலயத்திற்கும், பாடசாலை சமூகத்திற்கும் அவர் பெருமை சேர்த்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பணியாற்ற அதிகாரம் அவசியம்; மாகாண சபை தேர்தலில் களமிறங்க நளின் பண்டார விருப்பம்.!

நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து 13 முதல் 14 ஆண்டுகள் மக்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதிலும், எதிரணியில் இருந்து கொண்டு மக்களுக்குத் தேவையான பணிகளை திறம்பட செய்ய முடியாது…

48 0 0
இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி பிக்கு உ*யிரிழப்பு.!

கண்டி – உடுதும்பர, கைகாவல பகுதியில் உள்ள ஹீன் கங்கையில் நீராடச் சென்ற 11 வயதான பௌத்த பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

48 0 0
இலங்கை செய்திகள்

மின்சாரத் தடையால் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சிக்கல்.!

திடீரென மின்சாரத் தடை ஏற்பட்டதால் சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,சண்டிலிப்பாய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்…

42 0 0
இலங்கை செய்திகள்

கொக்கைன் போ*தைப்பொருளுடன் ஒருவர் கைது.!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் உகண்டா பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் 43…

42 0 0