உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

செம்மணி மனிதப் படுகொ@லைக்கு விசாரணை கோரி யாழ். நகரில் இன்று பேரணி

55 பார்வைகள்

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளைச் சர்வதேச சமூகம் முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்த் தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்படுகிறது

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து 583 மனித என்புக்கூடுகளும் சான்றுப் பொருள்களும் மீட்கப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து உள்நாட்டு விசாரணைகளில் நம்பகத்தன்மை இருக்காது எனவும், எனவே சர்வதேச மேற்பார்வையின் கீழ் சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கோரியே இந்தப் பேரணி நடைபெறவுள்ளது.

நல்லூர் பகுதியில் அமைந்துள்ள ஐ.நா. காரியாலயத்துக்கு அருகில் இன்று காலை ஆரம்பமாகும் இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் ஊடாகச் சென்று கிட்டு பூங்கா பகுதியைச் சென்றடைந்து அங்கு பொதுக்கூட்டத்துடன் நிறைவடையவுள்ளது.

இந்தப் பேரணிக்கு ஆதரவு கோரி தமிழ்த் தேசிய பேரவையினாரால் நேற்று துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டு, வர்த்தகர்கள் மற்றும் மக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிவைத்து பேரணிக்கு ஆதரவு கோரினர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி இளைஞன் கொ*லை.!

அனுராதபுரம், பரசன்கஸ்வெவ – வன்னி பளுகொல்லேவ பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்பின்போது, 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச்…

46 0 0
இலங்கை செய்திகள்

பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியாது.!

2017 ஆம் ஆண்டில் பழைய தேர்தல் முறைமை குறித்துக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த எதிர்க்கட்சியினர், இன்று அதே தேர்தல் முறைமையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்…

35 0 0
இலங்கை செய்திகள்

மக்களை ஒருபோதும் நாம் கைவிடமாட்டோம்; அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.!

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றியே தீருவோம் என்றும், தம்மை நம்பி வாக்களித்த மக்களை ஒருபோதும் கைவிடமாட்டோம் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.…

20 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

39 0 0