உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

பிணையில் உள்ளவர்கள் எதிர்க்கட்சிப் பங்கை வகிக்க முடியுமா?

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
81 பார்வைகள்

“பிணையிலும் சந்தேகத்தின் பேரிலும் இருப்பவர்களால் எதிர்க்கட்சியின் சரியான பங்கை வகிக்க முடியுமா?” என இணைந்த எதிர்க்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் நிலுக்ஷ குமார கேள்வி எழுப்பியுள்ளார்.

அண்மையில் காலிப் பகுதியில் கூட்டம் ஒன்றை நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சிக் குழுவினர் குறித்து இன்றைய தினம் கொழும்பில் கருத்துத் தெரிவித்த அவர், ஊழல் மற்றும் மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிலர் ஒன்றாக இணைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முயல்வதாகச் சாடினார்.

குறிப்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத், பசில் ராஜபக்ஷ மீது சுமத்திய குற்றச்சாட்டுகளைச் சுட்டிக்காட்டிய நிலுக்ஷ குமார், கேரம் போர்டுகளை நாட்டிற்குள் கொண்டுவந்தவர் வெளியிலும், அதனை விநியோகித்தவர் சிறையிலும் இருப்பதாக எதிர்க்கட்சியினரே பரஸ்பரம் குற்றம் சுமத்திக் கொள்வதை வெளிப்படுத்தினார்.

மேலும், “தெய்வமே, எங்களைக் கைது செய்கிறார்கள்; ஒன்றுதிரண்டு இதைத் தடுப்போம்” என்ற மனநிலையிலேயே இந்தக் குழுவினர் தற்போது செயற்பட்டு வருவதாக விமர்சித்தார்.

நாட்டில் கோதுமை மா விலை உயர்வு போன்ற மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளுக்காக இவர்கள் குரல் கொடுக்கவில்லை என்றும், மாறாகத் தங்களது சொந்த அரசியல் மற்றும் சட்டப் பிரச்சினைகளில் இருந்து தப்பிப்பதற்காகவே மக்களை முன்னிறுத்தி நாடகமாடுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் நீதிபதிகளின் பதவிக் காலம் நீடிக்கப்படுவதால், சட்டத்தின் பிடி இறுகித் தங்களுக்கான தண்டனை உறுதி செய்யப்படும் என்ற அச்சத்திலேயே பிணையில் உள்ள இந்தக் குழுவினர் கூச்சலிட்டு வருவதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0