அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வைப்பு.!
வட்டவளை பிளாக் வாட்டர் தோட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, கனடாவில் வசிக்கும் டென்மார்க் அன்னை அபிராமி உபாசகியின் சீடர்கள் (கனடா நாட்டைச் சேர்ந்த) தமது நிதிப் பங்களிப்பின் ஊடாக உடைகளை வழங்கி வைத்துள்ளனர்.
குறித்த உதவிப் பொருட்கள், நுவரெலியா மாவட்ட ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் எஸ். தியாகு அவர்களின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன.
அதேவேளை, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தேவையை கருத்திற்கொண்டு, மத்திய மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினரும் சமூக சேவையாளருமான திரு. ராஜாராம் அவர்களின் நிதிப் பங்களிப்பில் படுக்கை மெத்தைகளும் வழங்கப்பட்டன.
இவ்வாறு பல்வேறு தரப்பினரின் பங்களிப்புடன் வழங்கப்பட்ட உடைகள் மற்றும் படுக்கை மெத்தைகள், அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளன.


