உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
31 திங்கள்

பொரளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது

இலங்கை செய்திகள் 14 மணி நேரம் முன்
95 பார்வைகள்

கொழும்பு – 08, மெகசின் வீதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த மகோற்சவத்தின் சிகர நிகழ்வான தேர்த்திருவிழா நேற்றைய தினம் இரவு (2026 ஆகஸ்ட் 29) மிகக் கோலாகலமாகவும் பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது.

கடந்த 2026 ஆகஸ்ட் 20 ஆம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இம்மாபெரும் உற்சவத்தில், ஆகஸ்ட் 26 ஆம் திகதி பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள அதுல தஸ்ஸன பௌத்த மத்திய நிலையத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பால்குடப் பவனி தேவஸ்தானத்தைச் சென்றடைந்தது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 27 ஆம் திகதி 108 சங்காபிஷேக பூஜைகளும் வெகு விமரிசையாக நடைபெற்றன.

ஆலய பிரதம குரு சிவஸ்ரீ விநாயகன் சர்மா தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இத்திருவிழாவில், இந்து – பௌத்த விழுமியங்களோடு தமிழ் – சிங்கள கலாச்சார இணைப்பில் பிரமாண்டமான தேர் மற்றும் பெரஹரா ஊர்வலமாக நடைபெற்றமை முக்கிய சிறப்பம்சமாகும்.

இவ்வூர்வலத்தில் அம்பாளின் தேரோடு புனித யானைகள் பௌத்த புனித சின்னங்களை ஏந்தியவாறு பவனி வர, பறவைக்காவடி, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், குதிரையாட்டம் மற்றும் சிங்கள பெர மேள வாத்தியங்களுடன் கூடிய கண்கவர் நடன நிகழ்வுகளுடன் ஊர்வலம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

தேவஸ்தானத்தில் ஆரம்பமான அலங்கரிக்கப்பட்ட தேர்பவனி, பொரள்ளை சந்தியூடாகக் கொட்டா வீதி, லெஸ்லி ரணகல மாவத்தை ஆகிய வீதிகள் வழியாக உலா வந்து மீண்டும் பொரள்ளை சந்தியூடாக தேவஸ்தானத்தைச் சென்றடைந்தது. இத் திருவிழாவில் இன, மத பேதமின்றி அனைத்து மக்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு அம்பாளின் அருளைப் பெற்றுக் கொண்டனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில் மூழ்கி மாயம்.!

பமுணுகம, எபாமுல்ல கடற்கரையில் நீராடிக் கொண்டிருந்த குழுவினரில் பெண் ஒருவர், இரண்டு சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். காணாமல்போனவர்கள் 35…

40 0 0
இலங்கை செய்திகள்

பெற்றோல் விலைகள் குறைப்பு.!

மாதாந்த எரிபொருள் விலைச் சூத்திரத்துக்கமைய பெற்றோலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வரும்…

48 1 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் போ*தைப் பாவனையில் மாணவர்கள்; விடுக்கப்பட்டுள்ள அவசர கோரிக்கை.!

மது பாவிப்பவர்களை விட போதைப்பொருள் பாவனையாளர்களின் பாவனை மிகவும் அதிகமாகவும், அந்த குடும்ப நிலை மிகவும் சீரழிந்ததாகவும் இருக்கிறது. மாணவர்கள் மத்தியில் மிகவும் அதிகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.…

34 0 0
இலங்கை செய்திகள்

வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் தீப்பரவல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பொற்பதி கிராமத்தில் இன்று பிற்பகல் 4:00 மணியளவில் ஏற்பட்ட தீ அனர்த்தத்தினால் வீடு ஒன்று பகுதியளவில் எரிந்துள்ளதுடன் பனை மரங்கள் சில தென்னை…

66 0 0