சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது.!
நாட்டின் இருவேறு பகுதிகளில் பொலிஸார் நேற்று வியாழக்கிழமை (06) மேற்கொண்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிங்வத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரடையிஸ் வத்தை பகுதியில், வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் வாதுவ பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அவரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக நடவடிக்கைகளுக்காக பிங்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தாண்டியா பகுதியில், மாரவில பொலிஸ் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுனேரிய பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 75 லீற்றர் சட்டவிரோத மதுபானமும், மதுபானம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 1215 லீற்றர் கோடாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், இந்த கைது நடவடிக்கைகள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.