உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

யாழில் கேரளா கஞ்சா கைப்பற்றல்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
64 பார்வைகள்

யாழ்ப்பாணத்துக்கு கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோகிராம் கேரளா கஞ்சாவில் 16 கிலோ கேரளா கஞ்சாவை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்தியாவிலிருந்து வல்லிபுரம் கடற்கரைப் பகுதி ஊடாக யாழ்ப்பாணத்துக்கு இந்தக் கேரளா கஞ்சா கடந்த வாரம் கடத்திச் வரப்பட்டதாக புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படையில் பொலிஸார் தீவிர விசாரணைகளிலும் வடமராட்சிப் பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டு வந்த நிலையில், நெல்லியடி பகுதியில் உள்ள பற்றைக்காடுகளுக்குள் கஞ்சா பொதி காணப்படுவதாக கிடைத்த தகவலின் பிரகாரம் அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், அதனை கைப்பற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட பொதி 16 கிலோகிராம் எனவும் அவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடத்திச் செல்லப்பட்ட 250 கிலோ கஞ்சாவை சிறு சிறு பொதிகளாக வடமராட்சி பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளுக்கு கடத்தும் செயற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், அது தொடர்பில் பொலிஸார் தீவிர கண்காணிப்பிலும் விசாரணைகளிலும் ஈடுபட்டுள்ளதாகவும், இந்த கஞ்சா தொடர்பாக தகவல் அறிந்தவர்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0