உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
25 செவ்வாய்

“ஹரக் கட்டா” உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பயங்கரவாத வழக்கை முன்னகர்த்த முடியாது! – நீதிமன்றம் அதிரடி!!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
112 பார்வைகள்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த போது தப்பிச் செல்லத் திட்டமிட்டதாகக் கூறி, “ஹரக் கட்டா” என்றழைக்கப்படும் நதுன் சிந்தக விக்ரமரத்ன உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை தொடர்ந்து முன்னகர்த்திச் செல்ல முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனினும், குற்றம் சாட்டப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேற்கொண்டதாகக் கூறப்படும் செயற்பாடுகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக குற்றவியல் தண்டனைச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா மற்றும் சட்டத்தரணி ஜாலிய சமரசிங்க உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன்வைத்த ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

57 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

42 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

66 0 0
இலங்கை செய்திகள்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்

கரைத்துறைப்பற்று பிரதேச சொயலாளராக சுஜீவா சிவதாஸ் கடமைகளை பொறுப்பேற்றார். முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக சுஜீவா சிவதாஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை…

60 0 0