மெட்ரோ போக்குவரத்துத் திட்டத்திற்காக 104 பேருந்துகள் நாட்டை வந்தடைந்தன
இலங்கை மெட்ரோ போக்குவரத்து திட்டத்திற்காகக் கொள்வனவு செய்யப்பட்ட 104 பேருந்துகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இலங்கை மெட்ரோ போக்குவரத்துத் திட்டம் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கப்படும் போது இந்த பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி இறங்கும் வகையில் இந்த குறைந்த தரைப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகள் நாட்டின் ஒட்டுமொத்த பொதுப் போக்குவரத்து அனுபவத்தையும் மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
புதிய பேருந்து சேவையின் செயற்பாடுகள் மற்றும் வெளியீடு குறித்த கூடுதல் விபரங்களை அதிகாரிகள் திட்டத்தின் தொடக்கத்திற்கு முன்னதாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.