உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வழக்குகளைத் தாமதமின்றித் தீர்க்கவே நீதியரசர்களின் ஓய்வு வயது அதிகரிக்கப்படுகிறது!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
78 பார்வைகள்

தனிநபர் ஒருவரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு அரசமைப்பு மற்றும் நீதித்துறை அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவைப்  பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதித்துறை அதிகாரத்தை மாகாண மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

குற்றவியல் தொடர்பில் முதல்நிலை நீதித்துறை அதிகாரம் கொண்ட மாகாண மேல் நீதிமன்றங்கள் மற்றும் சிவில் மேன்முறையீட்டு அதிகாரம் கொண்ட சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள அதிகளவிலான வழக்குகளைத் தாமதமின்றித் தீர்ப்பதற்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியுள்ளது.

நீதிமன்றங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் மாகாண மட்டத்தில் மேன்முறையீட்டு நீதிமன்றங்களை நடைமுறைப்படுத்துதல் போன்ற காரணங்களால், அந்நீதிமன்றங்களுக்கு அனுபவமிக்க மற்றும் புலமைமிக்க நீதியரசர்களின் சேவையைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே நீதியரசர்களின் தற்போதைய சட்ட ரீதியான ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்கான தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கமையவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

59 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

65 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

50 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

72 0 0