வவுனியா இராசேந்திரங்குளம் புனித அந்திரேயா முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா
வவுனியா இராசேந்திரங்குளம் புனித அந்திரேயா முன்பள்ளியின் 2026ம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு அண்மையில் முன்பள்ளியின் முகாமையாளர் அருட்பணி பி.கலாவதி அவர்களின் தலைமையில் மிக சிறப்பாக இடம்பெற்றது.
நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும், சமாதான நீதவானுமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் கலந்துகொண்டிருந்தார்.
கெளரவ விருந்தினர்களாக இராசேந்திரங்குளம் பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.ஜெயமோகன், மறவன்குளம் பிரிவு சபைக்குரு அருட்பணி எஸ்.யூட் வினோதன், வ/நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய ஆசிரியர்கள், அயல்முன்பள்ளி ஆசிரியர்கள், கிராம அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
முன்பள்ளி சிறார்களின்விளையாட்டு நிகழ்வுகள், இசையும் அசையும் நிகழ்வு, விநோத உடை நிகழ்வு, பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர்களுக்கான நிகழ்வுகள் என்பன இடம்பெற்றதுடன் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசில்களும் முன்பள்ளி சிறார்கள், ஆசிரியர்கள் அனைவருக்குமான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பரிசுப்பொருட்களை பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளரும், சமாதான நீதவானுமாகிய பாலச்சந்திரன் சிந்துஜன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




