திருக்கோவிலில் சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பித்து வைப்பு.!
திருக்கோவில் பிரதேச செயலகத்தின் கீழ் தம்பட்டை 02 ல் உள்ள நெற்களஞ்சியசாலையில் அரசாங்கத்தின் 2026 சிறுபோக நெல் கொள்முதல் வேலைத்திட்டம் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வு திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.தங்கையா கஜேந்திரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் சிறுபோக நெல் கொள்முதல் வேலைத்திட்டத்திற்கு பிரதம அதிதியாக கரையோர பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ.A.ஆதம்பாவா மற்றும் அம்பாறை மாவட்ட செயலாளர் திரு. அனுபமா மங்கள விக்ரமராச்சி கலந்துகொண்டு ஆரம்பித்து வைத்தனர்.
இவ் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் திரு.ம.கேந்திரமூர்த்தி, திருக்கோவில் பிரதேச சபை உதவி தவிசாளர் கௌரவ S.கமல்ராஜன் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் திரு பா.சுதாகரன் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் விவசாய அமைப்பின் அங்கத்தவர்கள் விவசாயிகள் என பலரும் கலந்துகொண்டனர்.




