உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மூத்த ஊடகப் படப்பிடிப்பாளர் சுரேந்திரனின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் இரங்கல்!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
106 பார்வைகள்

மூத்த ஊடகப் புகைப்படப்பிடிப்பாளரும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் சிரேஷ்ட உறுப்பினருமான சண்முகலிங்கம் சுரேந்திரனின் மறைவுச் செய்தி அதிர்ச்சியையும் ஆழ்ந்த வேதனையையும் தருகின்றது என்று தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“சுமார் 40 வருடங்களுக்கு மேலாகச் சண்முகலிங்கம் சுரேந்திரன் பத்திரிகை ஒன்றின் புகைப்படப் பிடிப்பாளராகக் கடமையாற்றி, அண்மையில் தனது உடல்நிலை காரணமாக ஓய்வுபெற்றிருந்த நிலையிலேயே, தனது 69 ஆவது வயதில் திருகோணமலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

திருகோணமலை, சாம்பல்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட சுரேந்திரன், கொழும்பு மட்டக்குளியை வசிப்பிடமாகக் கொண்டே தனது புகைப்பட ஊடகப் பணியைச் செவ்வனே ஆற்றி வந்தார்.

ஊடகத்துறையில் தன்னை இணைத்துக்கொண்டது முதல் தனது இறுதிமூச்சு வரை ஊடகப் பணியை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். புகைப்பட ஊடகவியலாளர் ஒருவர் எவ்வாறிருக்க வேண்டும் என்பதற்கு அவர் சிறந்ததொரு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.

தனது புகைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனங்களில் ஆழப்பதிந்த சுரேந்திரன், தான் பணிபுரிந்த ஊடகத்தின் மேம்பாட்டுக்காக அயராது அர்ப்பணிப்புமிக்க சேவைகளை முன்னெடுத்தவர். யுத்த காலச் சூழ்நிலை உட்பட நெருக்கடியான, சவால்மிக்க காலகட்டங்களில் கூட ஊடக நேர்மை தவறாமல் அயராது பணியில் ஈடுபட்டார்.

தனது துணிச்சலான, தனித்துவமான புகைப்படப் பணியின் மூலம் தமிழ் ஊடகங்களில் தனிமதிப்பும் தமிழ் மக்களின் மனங்களில் தனி இடமும் பிடித்திருந்த சுரேந்திரனின் மறைவு, தமிழ் ஊடகத்துறைக்கும் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்துக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாக உள்ளது. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதுடன், அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.” – என்று அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில், இலக்கம் 08, நித்தியபுரி, மூன்றாம் கட்டை, திருகோணமலை என்ற முகவரியில் நடைபெற்று, சாம்பல்தீவு இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0