உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

மலையக மக்களின் காணி உரிமை கேள்விக்குறியாகியுள்ளது – பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டல்!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
75 பார்வைகள்

தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் விசேட பொதுக்கூட்டம் இன்று (ஹட்டனில்) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

தொழிலாளர் தேசிய சங்கத்தின் மற்றும் தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவரும், கௌரவ முன்னாள் அமைச்சருமான பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கட்சியின் பொதுச்செயலாளரும்  உறுப்பினருமான M. நகுலேஸ்வரன், உயர்மட்ட உறுப்பினர்கள், நிர்வாக சபையினர், தோட்டக் கமிட்டித் தலைவர்கள், தலைவிகள், அங்கத்தவர்கள், பணிமனை உத்தியோகஸ்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் தொழிற்சங்கத்தின் எதிர்கால அரசியல் திட்டங்கள், புதிய வேலைத்திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புகள் குறித்து விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய தலைவர் பழனி திகாம்பரம், தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

இதன்போது உரையாற்றிய அவர்,

“நடப்பு அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளைச் சரியாக நிறைவேற்றியுள்ளதா என்பதில் மக்கள் மத்தியில் பெரும் கேள்வி எழும்பியுள்ளது.

அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகளால் மலையக மக்களின் அன்றாட வாழ்க்கை மேலும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குறிப்பாக, மலையக மக்களின் நீண்டகாலக் கனவான காணி உரிமை விவகாரம் இன்று இழுபறியான நிலைக்குத் தள்ளப்பட்டு, கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன

இதனால், புதியதொரு அரசியல் மாற்றத்தின் அவசியத்தை மலையக மக்கள் தற்போது ஆழமாக உணரத் தொடங்கியுள்ளனர்” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஸ்தாபன ரீதியாக அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தின் மற்றொரு சிறப்பம்சமாக, தேசிய மக்கள் சக்தியின் (NPP) ஆதரவாளர்கள் மற்றும் ஏனைய மலையகக் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர், தொழிலாளர் தேசிய சங்கத்தின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு பழனி திகாம்பரம் முன்னிலையில் தங்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0