நுவரெலியாவில் பாரிய காட்டுத்தீ!
நுவரெலியா மாவட்டம் வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன பகுதியில் பாரிய காட்டுத் தீ பரவல்.
வலப்பனை ஹரஸ்பெத்த, கல்தெகபத்தன வனப் பகுதியில் பகுதியில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தற்போது வரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீயில் எரிந்து கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
இத் தீயை கட்டுப்படுத்துவதற்காக அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் பொதுமக்களின் உதவியை வனத் துறையினர் கோரியுள்ளனர்.
இப் பகுதியில் அதிகமான உஷ்ணம் நிலவி வருவதால் தீ வேகமாகப் பரவி வருகிறது, அதை அணைக்கும் பணிகள் அவசரமாக வனத் துறையினர் அதிரடி படையினர் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பொது மக்கள் கிராம மக்கள் இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இருந்த போதிலும் தீ பரவல் அதிகரித்து வருகிறது.