உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பதற்கான அமைச்சரவை அறிக்கை தயாரிக்கும் பணி ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
67 பார்வைகள்

நீதியரசர்கள் மற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை மேலும் நீட்டிப்பது தொடர்பான அமைச்சரவை அறிக்கையைத் தயாரிக்குமாறு அறிவுறுத்தல்கள் கிடைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அது தொடர்பான அமைச்சரவை அறிக்கையைத் தயாரிப்பதற்குத் தேவையான முதற்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்மொழிவ ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக வெளியாகும் செய்திகள் குறித்து கருத்து தெரிவித்தபோதே நீதி அமைச்சர் இதனை உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதுகுறித்து விரிவாக விவாதிக்கத் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நீதித்துறை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிய நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார:
“பொதுவாக, நீதிமன்றங்களில் வழக்குகள் கணிசமான காலம் இழுத்தடிக்கப்படும் நிலை காணப்படுகிறது.

இதற்கான காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யும் அதே வேளையில், நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பை விரிவுபடுத்த வேண்டிய அவசியமும் உள்ளது.

புதிய நீதிபதிகளை நியமிக்க அரசாங்கம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேநேரம், நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீதித்துறைத் தளத்திலிருந்தே எழுந்துள்ளது.

முன்னதாக, உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டபோதிலும், அவர்களின் ஓய்வுபெறும் வயது வரம்பு அதிகரிக்கப்படவில்லை.” எனத் தெளிவுபடுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0