உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இன்று அதிகாலை கோர விபத்தில் சிக்கியது தொலைதூரப் பேருந்து!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
141 பார்வைகள்

கொழும்பிலிருந்து கல்முனை சென்ற பஸ் தன்னாமுனையில் விபத்து –  கடைகள் சேதம், பயணிகள் படுகாயம்!

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து ஒன்று மட்டக்களப்பு – கொழும்பு பிரதான வீதியில், தன்னாமுனைப் பகுதியில் இன்று (26.07.2026)ஆம் திகதி  அதிகாலை பாரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

அதிகாலை 04.45 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாதையை விட்டு விலகி, வீதியோரத்திலிருந்த கடைகளுடன் பலமாக மோதியுள்ளது.

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கமே இவ்விபத்துக்கு முக்கிய காரணம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவ்விபத்தின் போது பேருந்துக்கும், அருகிலிருந்த கடைகளுக்கும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

எனினும், அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதங்கள் எதுவும் நிகழவில்லை. பேருந்தில் பயணித்த பயணிகள் சிலர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

65 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

53 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

77 0 0