கோர விபத்தில் இளைஞன் பலி! – புளியங்குளத்தில் சம்பவம்!!
வவுனியா – புளியங்குளம், புதூர் நாகதம்பிரான் சந்தி பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மேலும் தெரியவருகையில்..
யாழில் இருந்து வவுனியா நோக்கி தனது சகோதரியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் A9 வீதி புளியங்குளம், புதூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அவரது சகோதரி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் வவுனியா – புதுக்குளம் பகுதியை சேர்ந்த சத்தியநாதன் சஞ்சீவன் (வயது- 23) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.
விபத்து குறித்து #பளியங்குளம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
