உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் சஷி தரூருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
106 பார்வைகள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய தேசிய காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும், கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் தொகுதி பிரதிநிதியும், இந்திய நாடாளுமன்ற வெளிநாட்டு விவகாரங்களுக்கான நிலைக்குழுவின் தலைவருமான டாக்டர் சஷி தரூரை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா.) பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் இன்று (25) சந்தித்தார்.

இதன்போது, இலங்கையின் பொருளாதார மீட்சிப் பயணம், தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாகக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

அத்துடன், அண்மையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் பேரவையின் நோக்கங்கள், பணிப்பரப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பிலும் ஜீவன் தொண்டமான், டாக்டர் சஷி தரூருக்கு விளக்கமளித்தார்.

சந்திப்பின் நிறைவாக, இலங்கையின் செழுமையான கலை மரபை பிரதிபலிக்கும் வகையில், ஓவியர் ராஜ சேகர் வரைந்த அசல் ஓவியமான “The Knife Sharpener” நினைவுப் பரிசாக டாக்டர் சஷி தரூருக்கு ஜீவன் தொண்டமான் வழங்கினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

66 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

72 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

55 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

79 0 0