உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கொழும்பில் சீனப் பிரஜைகள் மோதல்; ஒருவர் கடத்தப்பட்டு கொ*லை.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
55 பார்வைகள்

கொழும்பு, கோட்டை துறைமுக நகரில் சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சீனப் பிரஜை ஒருவரின் சடலம், எஹலியகொடை – கரந்தனை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று அதிகாலை கொழும்பு, கோட்டை துறைமுக நகருக்கு மீன்பிடிக்க வந்த மூன்று சீனப் பிரஜைகள் மீது, மற்றொரு சீனப் பிரஜைகள் குழுவினர் தாக்குதல் நடத்தி ஒருவரைக் கடத்திச் சென்றுள்ளமையுடன், அவர்களது வேன் வாகனத்தையும் அங்கேயே விட்டுவிட்டுத் தப்பியோடியுள்ளனர். அந்த வேனிலிருந்து வாயுத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஹலியகொடை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, கரந்தனை – கேட்டுக்கடை காட்டுப் பகுதியில் கல் குவியலுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலம் கண்டெடுக்கப்பட்டு, கொழும்பு துறைமுக நகரில் கடத்தப்பட்ட சீனப் பிரஜையினுடையது என உறுதிப்படுத்தப்பட்டது. சடலம் மேலதிக விசாரணைகளுக்காக அவிசாவளை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சீனப் பிரஜைகள் நாட்டிலிருந்து தப்பியோட முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காகக் கரையோரப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்துமாறும், இலங்கையில் வசிக்கும் சீனக் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சீனத் தூதரகம் இலங்கைப் பொலிஸாருக்குக் கோரிக்கை விடுத்துள்ளதுடன், சீனக் குடிமக்களையும் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

69 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

73 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

57 0 0
இலங்கை செய்திகள்

சுகீஷ்வர பண்டாரவின் பிணை மனு நிராகரிப்பு!

புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஷ்வர பண்டாரவின் பிணை கோரிக்கை நீதிமன்றத்தால் மீண்டும் நிராகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, சுகீஷ்வர பண்டாரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை…

80 0 0