உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

வீதியில் முறிந்து விழுந்த பாரிய மரம்; போக்குவரத்து பாதிப்பு.!

இலங்கை செய்திகள் 1 மாதம் முன்
60 பார்வைகள்

ஹட்டன் கொழுப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை வேளையில் பாரிய மரம் சரிந்ததால் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று 23 ஆம் திகதி அதிகாலை வேளையில் ஹட்டன் கொழுப்பு பிரதான சாலையில் மல்லியப்பு டீ விழா விருந்தினர் விடுதி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இன்று அதிகாலை வீசிய பலத்த காற்று காரணமாக இந்த பாரிய மரம் வீதியின் குறுக்கே சரிந்து விழுந்த நிலையில் ஹட்டன் – கொழுப்பு, ஹட்டன் – கண்டி செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

நோர்வூட் வீதி அபிவிருத்தி அதிகார சபை, ஹட்டன் பொலிஸார் அந்த பாரிய மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

மரம் வெட்டி அகற்றப்பட்ட பின்னர் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது என ஹட்டன் வலய பொலிஸ் தலைமை அதிகாரி பிரதீப் வீரசேகர தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீட்டு முற்றத்தில் இருந்து சக்திவாய்ந்த மோட்டார் குண்டு மீட்பு.!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாழங்குடா பிரதேசத்தில் நேற்று மதியம் (25) சக்தி வாய்ந்த குண்டு ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. தாழங்குடா வேடர் குடியிருப்பு சமுர்த்தி வீதியில்…

0 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது குடிநீர் பிரச்சினையை முகம்கொடுத்துவரும் நிலையில் உள்ளுராட்சிமன்றங்கள் ஊடாக சுமார் 9500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோக பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் குடிநீரை பொதுமக்கள் கவனமாக பயன்படுத்துமாறும்…

70 0 0
இலங்கை செய்திகள்

‘நீதிக்கான நீள் பயணம்’ அனைத்துலக மாநாடு தொடர்பாக மன்னார் மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு.

(மன்னார் நிருபர்) (25-08-2026) மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (25) மன்னார்…

74 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த அரசு உத்தேசம்!

மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த…

58 0 0