உள்ளடக்கத்திற்குச் செல்க
ஜூலை 2026
24 வெள்ளி

ஈரானுடனான பேச்சுவார்த்தைக்குத் தயாராகவே உள்ளோம் – அமெரிக்கா அறிவிப்பு!

உலக செய்திகள் 17 மணி நேரம் முன்
67 பார்வைகள்

ஈரான் நெருக்கடிக்குத் தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா இன்னும் தயாராகவே உள்ளது என்றும், ஆனால் தெஹ்ரான் தரப்பு பேச்சுவார்த்தைகளில் தீவிரத்தன்மை காட்டவில்லை என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்தார்.

இதற்கிடையில், விரிவடைந்து வரும் மோதலானது உலகின் மிக முக்கியமான இரண்டு எரிசக்திப் போக்குவரத்துப் பாதைகளை பாதித்துள்ளது.

யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் அச்சுறுத்தல்களுக்குப் பதிலளிக்கும் விதமாக, சவுதி மசகு எண்ணெயை ஆசியாவிற்கு ஏற்றிச் சென்ற மூன்று எண்ணெய் கப்பல்கள் செங்கடலில் தங்கள் பயணப் பாதையை மாற்றிக்கொண்ட மறுநாளே, தென்கிழக்கு ஆசிய வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் ரூபியோ இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

பெப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுடன் தொடங்கிய போரில், வளைகுடாப் பகுதி முழுவதும் ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலிவாங்கியுள்ள நிலையில், செங்கடலின் நுழைவாயில் பகுதியில் உள்ள கடற்கரையைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது திங்களன்று கடற்படை முற்றுகையை அறிவித்தனர்;

இதன் மூலம் இப்போரில் ஒரு புதிய முனையைத் திறக்கும் சூழல் உருவாகியுள்ளது.

வளைகுடாவிலிருந்து வெளியேறும் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் ஏற்கனவே அச்சுறுத்தல் விடுத்து வருவதால், தினமும் மில்லியன் கணக்கான பீப்பாய் சவுதி எண்ணெய் வெளியேறுவதற்கு செங்கடல் முக்கிய மாற்றுப் பாதையாக இருந்து வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

ஈரானின் ட்ரோன் தாக்குதலுக்கு பின்னால் ரஷ்யா உள்ளதா? களமிறங்கிய CIA!

பாரசீக வளைகுடாவில் உள்ள சிஐஏ (CIA) தளங்கள் மீது ஈரான் நடத்திய ட்ரோன் தாக்குதல்களின் போது, இலக்கு குறித்த தகவல்களையோ அல்லது மேம்பட்ட ட்ரோன் தொழில்நுட்பத்தையோ வழங்கி…

32 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கும் சவூதிக்கும் இடையே புதிய அணுசக்தி ஒப்பந்தம்!

மத்திய கிழக்கு நாடான சவூதி அரேபியாவுடன் தனது சிவில் அணுசக்தித் திட்டத்தை மேம்படுத்துவதற்கு வழிவகுக்கும் வகையில், அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த…

20 0 0
உலக செய்திகள்

ஈரானின் உட்கட்டமைப்புக்கள் தாக்கி அழிக்கப்படும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் பதில் வழங்கும் நோக்கில், ஈரானின் ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தை அமெரிக்கா…

26 0 0
உலக செய்திகள்

செங்கடலில் பயணித்த சவூதியின் இரு வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்!

செங்கடலில் பகுதியில் பயணித்த 2 சவூதி எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.…

49 0 0